சென்னை: சென்னை மாநகராட்சி கிழக்கு சிமெட்ரி சாலையில் நடந்த மறுவாக்குப்பதிவை பார்வையிட வந்த ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி அளித்த பேட்டி: முன்னாள் அமைச்சர், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகள் வகித்தவர் மயிலாப்பூரில் இருந்து 200 பேரை அழைத்து வந்து வன்முறையில் ஈடுபட்டார். அவர் மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார். இனி ராயபுரம் தொகுதியில் வாலாட்ட முடியாது. அமைதியாக வந்து மட்டுமே போகலாம் என்றார்….