திருச்செங்கோடு, அக்.28: எலச்சிப்பாளையம் ஸ்ரீராமச்சந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் நவராத்திரி விழா, தாளாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் தலைமையில் கொண்டாடப்பட்டது. மெட்ரிக் பள்ளியின் முதல்வர் வளர்மதி, நவராத்திரி விழாவை பற்றி பேசினார். விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் துர்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்து சமய புராண கதைகளை சித்தரிக்கும் கொலு பொம்மைகள், தேரோட்டம், கடவுள்களின் ஊர்வலம், விலங்குகள், பறவைகள், திருமண நிகழ்ச்சிகளை குறிக்கும் கொலு பொம்மைகள், மாணவர்களால் உருவாக்கப்பட்டு ஏழு படிகளில் கலைநயத்துடன் வைக்கப்பட்டிருந்தன. விழாவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். ராமச்சந்திரா பப்ளிக் பள்ளி முதல்வர் சுமதி நன்றி கூறினார்.
ராமச்சந்திரா மெட்ரிக் பள்ளியில் நவராத்திரி விழா
previous post