திருப்பூர், ஜூன் 25: திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நல்லூர் ராக்கியாபாளையம் பிரிவு இந்திரா நகரில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். 48வது டிவிஷன் தலைவர் சரவணன், 46 வது டிவிசன் தலைவர் சண்முகம், இளைஞர் காங்கிரஸ் கவின் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், ஜாமென்ட்ரி பாக்ஸ், புத்தகப் பை, பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் பாகனேரி ரவீந்திரன், அசன் சாதிக், முத்துசாமி, வெங்கடாசலம், பிரதீப், அருண் பிரகாஷ், விவசாயப்பிரிவு பழனிசாமி, அய்யாசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் சந்திப் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 48வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி கோபால்சாமி செய்திருந்தார்.