தர்மபுரி, ஜன.19: ஈரோட்டில் கடந்த 14ம் தேதி மனோ ஹாக்கி அகாடமி சார்பில், மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் தர்மபுரி எஸ்பியின் நேரடி பார்வையில், பயிற்சி பெறும் கோவை மேற்கு மண்டல காவலர் ஹாக்கி அணி பங்கேற்றது. இந்த போட்டியில் தர்மபுரி காவலர் அணி முதல் பரிசு பெற்றது. வெற்றி பெற்ற காவலர் ஹாக்கி அணி வீரர்கள், மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதத்தை நேரில் சந்தித்து, வெற்றி கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணியன், டிஎஸ்பி சத்தியமூர்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், வெங்கடாசலம் கலந்து கொண்டனர்.