மேட்டூர், பிப்.22: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்மை காரணமாக, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து தொடர்ந்து 300 கனஅடியாக நீடிக்கிறது. இதே போல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக தொடர்ந்து 54 கனஅடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும் நீர்திறப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 65.13 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 65.01 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 28.56 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் நீர்மட்டம் 65 அடியாக சரிவு
previous post