மேட்டூர், மார்ச் 14: மேட்டூர் அரசு கல்லூரியில் ₹13.50 லட்சம் மதிப்பிலான சுற்றுச்சுவர் மற்றும் பிரதான நுழைவாயிலை சதாசிவம் எம்எல்ஏ திறந்து வைத்தார். மேட்டூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா, பிரதான நுழைவாயில் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரேணுகாதேவி தலைமை வகித்தார். வணிகவியல் துறைத்தலைவர் சத்யா வரவேற்று பேசினார். மேட்டூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, கல்லூரியின் பிரதான நுழைவாயில் மற்றும் சுற்றுச்சுவரை சதாசிவம் எம்எல்ஏ திறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கு ஏற்றி ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரி முதல்வர் அன்பரசி சிறப்புரையாற்றினார். பாமக மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், வணிகவியல் துறை உதவி பேராசிரியர் சசிகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மேட்டூர் நகர பாமக செயலாளர் மதியழகன், தலைவர் சந்திரசேகர், முன்னாள் நகர பாமக செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் அமுதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேட்டூர் அரசு கல்லூரி ஆண்டு விழா
previous post