ஜெயங்கொண்டம், மார்ச் 24: ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிவேல் மனைவி சின்ன பொண்ணு (67). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருடைய குடும்பத்தினருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி அன்று இரவு சுந்தரமூர்த்தி மற்றும் அவரது மகன் சுபாஷ் (19), உறவினர் சண்முகம் மகன் கவின்(18) வெங்கடேசன் மகன் விமல் ராஜ் என்கிற விக்கி (23) ஆகியோர் சேர்ந்து சின்ன பொண்ணுவை கீழே தள்ளி திட்டி தாக்கியுள்ளனர்.காயமடைந்த சின்னபொண்ணு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சின்னப்பொண்ணு அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து சுபாஷ் கவின் விக்கி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.
மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது
previous post