ஓட்டப்பிடாரம், நவ. 10: மணியாச்சி அருகே முறம்பனில் ₹20 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை பணிகளை ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார். ஓட்டப்பிடாரம் யூனியன் முறம்பன் ஊராட்சியில் 3 தெருக்களில் ₹20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளின் தொடக்க விழா நடந்தது. யூனியன் சேர்மன் ரமேஷ் அடிக்கல் நாட்டி பணிகடிள தொடங்கி வைத்தார். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் மூலம் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை பெரும் பயனாளிகளுக்கு அரசின் இலவச வேட்டி சேலைகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன், கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி, கிராம உதவியாளர் கணேஷ், பஞ். தலைவர்கள் தேன்மொழி சுடலைமணி, அருண்குமார், திமுக ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.