Saturday, June 1, 2024
Home » முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 765 ரவுடிகளிடம் தீவிர விசாரணை: 14 பேர் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 765 ரவுடிகளிடம் தீவிர விசாரணை: 14 பேர் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர்

by kannappan

சென்னை: சென்னையில் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்படைய 765 ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் 14 பேர் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்து சென்றனர். சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி ‘குற்றங்களுக்கு எதிரான ரவுடிகள் ஒழிப்பு’ மூலம் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்கில் தொடர்புடைய 765 ரவுடிகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்த வழக்கில் தேடப்பட்டு வரும் 8 ரவுகள் கைது செய்யப்பட்டனர். மேலும், 14 ரவுடிகள் இனி எந்த குற்றங்களிலும் ஈடுபடமாட்டேன் என்று அந்தந்த துணை கமிஷனர்கள் முன்பு நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்து சென்றனர். இதுவரை சென்னை மாநகரில் 2,341 குற்றவாளிகள் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர். 479 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்….

You may also like

Leave a Comment

four × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi