முத்துப்பேட்டை, மார்ச் 15: முத்துப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி சிலர் மதுபானம் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்.இன்ஸ்பெக்டர் ரூபாவதி தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களின் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பின்னத்தூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன்(70), ஆலங்காடு பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம்(56) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஏராளமான மது பானங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.