சென்னை: வண்ணாரப்பேட்டையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு 1500 மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்கிறார்கள். மேலும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 350 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் மாணவிக்கு உதவிப் பேராசிரியர் சந்திரசேகர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக மாணவி கடந்த வாரம் மருத்துவமனை முதல்வர் பாலாஜியிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் விசாரணை நடத்தினர். அதில் மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என்று தெரியவந்தது. அதன் அடிப்படையில் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து உதவி பேராசிரியர் சந்திரசேகர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். இச்சம்பவம் ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….