நாமக்கல், டிச.19:நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ஞானபிரகாசம் (எ) அய்யாதுரை (69). இவர் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை, கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி, வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிய சிறுமி இது பற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து, பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அய்யாதுரையை கைது செய்தனர். இந்த வழக்கு, நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயபாரதி ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி முனுசாமி, குற்றம் சாட்டப்பட்ட அய்யாதுரைக்கு, 6 ஆண்டு சிறை தண்டனை ₹1,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அதைதொடர்ந்து, அய்யாதுரையை போலீசார் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.
முதியவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை
previous post