Sunday, May 19, 2024
Home » முதல் மனைவி இருக்கும்போதே 2வது திருமணம் பெண் டாக்டரை திருமணம் செய்து ஏமாற்றிய போலி பட்டதாரி கைது

முதல் மனைவி இருக்கும்போதே 2வது திருமணம் பெண் டாக்டரை திருமணம் செய்து ஏமாற்றிய போலி பட்டதாரி கைது

by kannappan

சென்னை: தேவகோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன் (34). இவர், ஐஐடியில் பிஎச்டி படித்துள்ளதாக கூறி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சண்முக மயூரி (29) என்பவரை கடந்த 2020ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு பெண் டாக்டர் வீட்டில் இருந்து 100 சவரன் நகை, மாப்பிள்ளைக்கு 5 சவரன் செயின், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.15 லட்சத்தில் கார் வாங்கி கொடுத்துள்ளனர். இதையடுத்து சென்னை ஜாபர்கான் பேட்டை, திருநகர் பகுதியில் தம்பதி வசித்து வந்துள்ளனர். அப்போது, பிரபாகரன் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரபாகரனுக்கு அவருடைய கல்லூரி தோழியான மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது முதல் மனைவிக்கு தெரிய வந்துள்ளது. அதுகுறித்து கணவரிடம் கேட்டபோது, சரியாக பதிலளிக்காமல் வீட்டில் இருந்து சென்று விட்டார். இதற்கிடையில் கொஞ்ச நாட்கள் கழித்து முதல் மனைவியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளதாகவும் தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் கூறி ஒரு வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர் சண்முக மயூரி அசோக் நகர் காவல்நிலையத்தில் தனது கணவர் தன்னை விட்டு இரண்டாவது திருமணம் செய்து சட்ட விரோதமாக குழந்தை பெற்று வேளச்சேரி பகுதியில் வீடு எடுத்து வசித்து வருவதாக கூறி புகார் அளித்தார்.புகாரின்படி, போலீசார் வழக்குபதிவு செய்து பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் முதல் மனைவியை ஏமாற்றியதும் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து குழந்தை பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முதல் மனைவியை ஏமாற்றியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து அசோக் நகர் மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரன் ஐஐடியில் பிஎச்டி படிப்பு முடிக்காததும், ஆனால், படித்தது போன்று போலி சான்றிதழ் தயார் செய்து பெண் மருத்துவரை திருமணம் செய்ததும் விசாரணையில் அம்பலமானது….

You may also like

Leave a Comment

nineteen + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi