ஆண்டிபட்டி, ஜூலை 5: ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ஸ்மார்ட் போன் டெக்னீசியன் மற்றும் ஆப் பரிசோதித்தல் பிரிவில் படிக்கும் பரமேஸ்வரி என்ற மாணவி முதல்வர் கோப்பைக்கான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதேபோல் சிலம்பம் ஒற்றை வால் வீச்சு போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.
இந்த மாணவியை பாராட்டும் வகையில் அரசு தொழில் பயிற்சி நிலையம் முதல்வர் சரவணன் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் இதனை ஊக்குவித்த பயிற்றுநர் திலகம் என்பவரை பாராட்டினார். இதேபோல் வெற்றி பெற்ற மாணவியை அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர்கள் மற்றும்
சக மாணவிகளும் பாராட்டினர்.