நெல்லை, செப். 26: முக்கூடல் அருகே தனியார் நிறுவன ஊழியரின் பைக்கை திருடிச் சென்றவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறையைச் சேர்ந்தவர் பால்ராஜ் (42). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் முக்கூடலில் உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக பைக்கில் வந்தார். இதையொட்டி ஓட்டல் வாசல் முன்பாக தனது பைக்கை நிறுத்திவிட்டு சாப்பிட ெசன்றார். சாப்பிட்டு விட்டு பின்னர் திரும்பிவந்த போது பைக்கை காணவில்லை. இதனால் பதறிய அவர் இதுகுறித்து முக்கூடல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார், பைக்கை திருடிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
முக்கூடல் அருகே பைக் திருட்டு
previous post