நெல்லை: மீனவர்களின் கருத்தை கேட்டறிந்த பிறகே மீன்வள மசோதா 2021 நிறைவேற்றப்படும் என மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மசோதாவின் சரத்துகளை மக்களிடம் எடுத்துரைப்போம் என்று தெரிவித்தார். மீன்வள மசோதாவை பற்றி பொய் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். …