கும்பகோணம், டிச.29: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருபுவனத்தில் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி, திருபுவனம் சிட்கோ அலுவலகம் முன் கும்பகோணம்-மயிலாடுதுறை மெயின் ரோட்டில் மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும், சொந்த தொழிற்கூடங்களில் அமைக்கும் சோலார் மின் இணைப்பு கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிறு மற்றும் குறு தொழிற்கூடத்திற்கு மின் கட்டண உயர்வு கூடாது என்பதை வலியுறுத்தி சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தலைவர் சுப்ரமணியன், செயலர் மனோகரன், பொருளர் சரவண பெருமாள் உள்ளிட்ட ஏராளமான சிறு மற்றும் குறுந்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கலந்து கொண்டனர்.