திருவெறும்பூர், செப்.26: தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருவெறும்பூர் பகுதியில் சுமார் 500 சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என கூறி தமிழக முழுவதும் உள்ள சிறு தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல கோடியில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி பகுதியில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டது. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.