திருத்துறைப்பூண்டி, ஆக. 3: திருத்துறைப்பூண்டி தாலுகா மின் அமைப்பாளர் சங்க தலைவர் தேர்வு ஓய்வூதிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் போட்டியின்றி முன்னாள் கவுரவ தலைவர் கண்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் கார்த்தி, துணைச் செயலாளர் காந்தி, பொருளாளர் ஜெகநாதன், துணைப் பொருளாளர் ராஜா மன்னார் மற்றும் சங்க உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.