சென்னை: எளாவூர், கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புறநகர் சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல்-கூடூர் மார்க்கத்தில் எளாவூர், கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், புறநகர் சிறப்பு ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும். அதேப்போல், சென்னை சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் சூலூர்பேட்டையிலிருந்து பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சூலூர்பேட்டைக்கு பதிலாக கும்மிடிப்பூண்டியிலிருந்து இயக்கப்படும். சூலூர்பேட்டையிலிருந்து மாலை 5.15 மணிக்கு வேளச்சேரி வரை செல்லும் ரயில் சூலூர்பேட்டைக்கு பதிலாக கும்மிடிப்பூண்டியிலிருந்து இயக்கப்படும்….
மின்சார ரயில் சேவையில் மாற்றம்
previous post