திருச்சி: திருச்சி எ.புதூரில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார். விழுப்புரம் பெரத்தாங்கல் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் காஜா மொய்தின் (46). இவர் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மெயின் ரோடு ஆர்.சி.நகர் சந்திப்பு பகுதியில் பேக் கடை நடத்தி வந்தார். இவர் நேற்றுமுன்தினம் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.