திருப்புவனம், மே 22: திருப்புவனம் அருகே முதுவந்திடல் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த ஆனந்தன் மகன் செண்பகமூர்த்தி(18). கம்பி கட்டும் தொழிலாளி. வேலை முடித்து நேற்று மாலை குளியல் தொட்டியில் குளிக்க சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி பழையனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.