வருசநாடு, அக். 18: வருசநாடு அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வருசநாடு அருகே உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சர்க்கிள் ராஜா. இவரது மகன் லோகிதன் (7). இவன், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தனது மாமா வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தொங்கிக் கொண்டிருந்த மின்சார கம்பி மீது சிறுவனின் கை உரசியதால், மின்சாரம் தாக்கியது.
இதில், காயமடைந்து மயங்கி விழுந்த சிறுவனை, அப்பகுதியில் இருந்தவர்கள் தூக்கிக்கொண்டு வருசநாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்ததாகக் கூறினர். இதனையடுத்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிந்து வருசநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.