சிவகாசி, டிச.13: .மனிதவள மேம்பாட்டு நிறுவனம் சார்பாக சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா சிவகாசியில் நடைபெற்றது. மனிதவள மேம்பாட்டு நிறுவன திட்ட இயக்குனர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் சங்கீதாஇன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், தொழிலதிபர் ஆசைத்தம்பி கலந்து கொண்டு 250 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் எஸ்எப்ஆர் பெண்கள் கல்லூரி தமிழ் துறை தலைவர் பொன்னி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், இந்திய தொழில் முனைவர் மேம்பாட்டு நிறுவனம் திட்ட அலுவலர் திருப்பதி, மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் கரைமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காளிராஜன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் கார்த்தீஸ்வரி நன்றி கூறினார்.