ஆலந்தூர்: சென்னை மாவட்ட தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் புழுதிவாக்கத்தில் நேற்று நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார் தலைமை வகித்தார். பெருங்குடி மண்டல உதவி ஆணையர் சீனிவாசன் செயற்பொறியாளர் முரளி 186வது வார்டு கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன் முன்னிலை வகித்தனர். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் புரிவதற்கான வங்கி கடன் உதவி மற்றும் தகுதி சான்றிதழ் பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.முகாமில், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, ஊன்றுகோல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, போன்றவற்றை வழங்கினார். மாநகராட்சி கவுன்சிலர்கள் சர்மிளா திவாகர், பள்ளிக்கரணை பாபு, சமீனா, செல்வம், ஸ்டெர்லி ஜெய், லட்சுமி, ஜெயபிரகாஷ், முன்னாள் கவுன்சிலர் ஜெ.கே.பர்மன், திமுக நிர்வாகிகள் ஜெ.திவாகர், குபேரா யோகராஜன், பாலகிருஷ்ணன், சரவணன், அப்பு, ஜெயக்குமார், சதீஷ், ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்….
மாற்றுத்திறனாளிகளுக்கானஒருங்கிணைந்த சிறப்பு முகாம்
previous post