மானூர்,மே 10: மானூர் அருகே எட்டாங்குளம் கோயில் திருவிழாவில் வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மானூர் அருகேயுள்ள எட்டாங்குளத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் முத்துப்பாண்டி (34). இவர் நேற்று முன்தினம் அங்குள்ள அம்மன் கோயில் விழாவுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மகாராஜன் மகன் செல்வம் (23), கோமு மகன் நடராஜன்(26), மாயாண்டி மகன் மணிகண்டன் (26), சங்கர் மகன் மகாராஜன்(19) ஆகியோர் முத்துப்பாண்டியை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மானூர் போலீஸ் நிலையத்தில் முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ ரபீனாமரியம் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர்.
மானூர் அருகே வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
previous post