குளித்தலை, மார்ச் 14: தமிழ்நாடு அளவில் ஏழு மண்டலங்கள் உள்ளடங்கிய மாநில விளையாட்டு போட்டிகள் சேலம் மண்டலத்தில் உள்ள மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் 12ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி தலைமையில், சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலையில் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா சத்தியமங்கலம் துரைசாமி நினைவு ஐ.டி.ஐ சேர்ந்த எலக்ட்ரீசியன் பிரிவில்பயிலும் மாணவர் ஜனா ஈட்டி எறிதல் போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனைப்படைத்தார். இதற்கான கோப்பையும் சான்றிதழையும் கோவை மற்றும் சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குனர் முஸ்தபாவிடம் பெற்றுக்கொண்டார். சாதனை படைத்த மாணவனை சுபம் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை தலைவர் பொறியாளர் சக்திவேல், தாளாளர் லதா சக்திவேல் , முதல்வர் .பாஸ்கரன் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.