மண்டபம், மே 19: இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் பள்ளி மாணவர் சேர்ப்பு பணியில் ஈடுபட்டனர். மண்டபம் ஊராட்சி ஒன்றியம், சேது நகர் பள்ளி இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் பவானி, பசுபதி நாயகி, தாரணி, செல்வராணி ஆகியோர் வீடு வீடாகச் சென்று அரசின் கல்விச் சலுகை மற்றும் திட்டங்கள் தொடர்பான துண்டு பிரசுரம் வழங்கி எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை பணியில் ஈடுபட்டனர்.
இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் லியோன் கலந்து கொண்டார். மண்டபம் வட்டார கல்வி அலுவலர்கள் மீனாட்சி, சூசை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா, பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா, பள்ளி மேலாண் குழு தலைவர் மரகதம், வார்டு உறுப்பினர் சரண்யா ஏற்பாடு செய்தனர்.