திருச்சி, டிச.17: திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக திருச்சி எஸ்,பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் உத்தரவின்பேரில், ஜீயபுரம் காவல் துறையினர். மாவட்ட வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்,
அப்போது புலிவலம் சுப்பராயம்பட்டியில் உள்ள உய்ய கொண்டான் வாய்க்கால் கரையில் ேநற்று மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர்.அவர்களை கவல் நிலையம் கொண்டுவந்தனர். விசாரணையில் பாலசுப்புரமணி (18), பிரதாப் ( 23), சரவணன் (58) சுரேஷ் (25) மற்றும் இரண்டு சிறுவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். சிறுவர்களை இருவர்கள் காவல் நிலைய பிணையில் விடப்பட்டு, மீதமுள்ள 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.