பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் மற்றும் கிராமபுறங்களில் உள்ள மாடுகளுக்கு வாய் சப்பை நோய் தாக்கத்தை தவிர்க்க, ஒவ்வொரு ஆண்டும் கோமாரிநோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது. ஆனால், மத்திய அரசின் தலையிட்டால், கடந்த இரண்டு ஆண்டாக அப்பணி மேற்கொள்ளாமல் கிடப்பல் போடப்பட்டது. இதற்கிடையே, சில கிராமங்களில் மாடுகளுக்கு அம்மைநோய் பரவி, அதன் மூலம் தாக்கப்பட்ட சில மாடுகள் இறந்ததாகவும், பல மாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இரண்டு மாதத்திற்கு முன்பு, பல்வேறு கிராத்தில் உள்ள மாடுகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி போடப்பட்டது. பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட சுமார் 30 கிராமங்களுக்கு, கால்நடை பராமரிப்புக்கு குழுவினர் நேரடியாக சென்று, மாடுகளுக்கு அம்மைநோய் தடுப்பூசி போடபட்டதாக கூறப்படுகிறது. அதிலும், கடந்த சிலநாட்களில் அம்மைநோயால் சில மாடுகள் இறப்பு என்ற தகவலால், அனைத்து மாடுகளுக்கும் அம்மை நோய் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டது. நேற்று சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. விடுபட்ட மாடுகளுக்கு, அம்மை நோய் தடுப்பூசி போட தீவிரப்படுத்தப்பட்டது என, பொள்ளாச்சி கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….