Friday, May 10, 2024
Home » மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி

மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி

by kannappan

கண்டமங்கலம்: புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை கண்டமங்கலம் பகுதியில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள வாய்க்கால் மேட்டுத்தெருவில் நேற்று இரவிலிருந்து பெய்து வரும் கன மழையினால் நீர் தேங்கி குளம் போல காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதுகுறித்து  ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.எஸ். வாசன், துணைத் தலைவர் நஜீராபேகம் தமின் ஆகியோருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றிய தலைவர் ஆர் .எஸ்.  வாசன் வேண்டுகோளின்படி கண்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி முருகன் அப்பகுதிக்கு விரைந்து சென்று மழைநீர் தேங்கி நின்ற இடத்தில் ஆய்வு செய்து உடனடியாக ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் இருந்த மழை நீர் அகற்றப்பட்டது. …

You may also like

Leave a Comment

1 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi