கந்தர்வகோட்டை, மார்ச்14: மல்லிகைநத்தம் கிராமத்தில் விநாயகர் ஆலய வருடாபிஷேகம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சி மல்லிகை நத்தம் கிராமத்தில் பிள்ளையார் ஊரணி குளகரையில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள விநாயகருக்கு இருபுறமும் ராகு-கேது உள்ளது சிறப்பாகும் .இந்த ஆலயம் ராகு- கேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது . மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், திருமண தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து 11 வாரம் நல்லெண்ணெய் ஊற்றி மண் விளக்கில் தீபம் ஏற்றினால் தோஷ நிவர்த்தி பெறுவதாக கூறுகிறார்கள். இந்நிலையில் இக்கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம் நேற்று நடைபெற்றது.