நாகர்கோவில், டிச. 30: கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி மருந்துவாழ்மலையில் மதுரையில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 120 பேர் சேர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மருந்துவாழ்மலையில் கிடந்த பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்றினர். தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள், ஆசிரியர்களை அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணை தலைவர் லெட்சுமணனன், நாகர்கோவில் மாநகர தலைவர் ராஜேஷ், நிர்வாகிகள் தியாகராஜன், திவாகர், சிவகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.