கோவை, டிச. 24: கோவை ரத்தினபுரி பாரதி தெருவை சேர்ந்தவர் ஜானகி (38). இவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை தோட்ட பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார். ஜானகி வீட்டு குளியலறைக்கு சென்றார். நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது ஜானகி குளியலறையில் வழுக்கி விழுந்து மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஜானகி பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.