Sunday, May 19, 2024
Home » மருத்துவமனையில் மனைவி கணவரான ராணுவ வீரர் மாயம்

மருத்துவமனையில் மனைவி கணவரான ராணுவ வீரர் மாயம்

by Karthik Yash

பேரையூர், அக். 29: பேரையூர் தாலுகா, சாப்டூர் அருகேயுள்ள செம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அசோக்குமரன் (20). இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிநயாவிடம் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதில் கணவன், மனைவி இருவரும் பிரிந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவத்திலிருந்த அசோக் குமரனை வரவழைத்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் பேரையூர் தனியார் மருத்துவமனையில் அபிநயா சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவருக்கு சாப்பிட இட்லி வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்ற அசோக் குமரன் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பேரையூர் போலீசார் வழக்குப் பதிவு மாயமான ராணுவ வீரரை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

18 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi