செய்துங்கநல்லூர், மே 6: மருதூர் அணைக்கட்டில் டைவ் அடித்து குளித்த போது கழுத்தில் அடிப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். நெல்லை அருகேயுள்ள தச்சநல்லூர் மங்களாகுடியிருப்பு தேவர் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் இசக்கிமுத்து (24). திருமணம் ஆகவில்லை. கூலித்தொழிலாளியான இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தச்சநல்லூரில் இருந்து தனது தம்பி உட்பட நண்பர்கள் 10 பேருடன் வல்லநாடு அருகே உள்ள மருதூர் அணைக்கட்டில் குளித்துக்கொண்டிருந்தார்.அப்போது இசக்கிமுத்து தண்ணீரில் தலைகீழாக குதித்துள்ளார். இதில் அவரது பின் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருதூர்அணையில் டைவ் அடித்தபோது படுகாயமடைந்த நெல்லை வாலிபர் சாவு
previous post