திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள மயான பூமி ஆக்கிரமிப்பால் மிகவும் சுருங்கி வருகிறது. இந்த ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் சார்பில், நகராட்சி ஆணையரிடம் கொடுத்த மனுவின் விவரம் :திருவள்ளூர் நகராட்சியில் லட்சுமிபுரம் பகுதி மக்களுக்கென, ஜெ.என்.சாலையில் எல்.ஐ.சி., பின்புறம் மயானபூமி உள்ளது. சிலர் மயானபூமியை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் வரும்காலத்தில் சடலங்களை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….