தர்மபுரி, மே 12: பென்னாகரம் செங்கனூர் அருகே ஜெங்கமையனூர் கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: செங்கனூர் ஊராட்சியில், ஜெங்கமையனூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். விவசாயம், கூலி தொழில், ஆடு, மாடு வளர்த்து வருகிறோம். கிராமத்தில் அருகே மயானம் உள்ளது. மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லை. மயானத்திற்கு செல்ல சாலை வசதிக்காக 12 பட்டாதாரர்களில் 11 பட்டாதார்கள் நிலம்கொடுத்து மயானத்திற்கு செல்ல சாலை ஏற்படுத்தப்பட்டது. அந்த சாலையின் வழியாக 10 சடலம் இதுவரை கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், மயானத்துக்கு செல்லும் சாலையில் பொக்லைன் வைத்து 6 அடி அகலத்திற்கு 60 அடி நீளம் தோண்டி சாலையை துண்டித்துள்ளனர். எனவே, கலெக்டர், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரகத்துறையினர் நேரில் ஆய்வு செய்து சாலையை சீர் செய்து தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.