மூணாறு, ஏப். 16: கேரளா மாநிலம் மூணாறு அருகே அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான குண்டளை எஸ்டேட்டைச் சேர்ந்தவர் மரியஅந்தோணி (65).இவர் நேற்று முன்தினம் டூவீலரில் மூணாறுக்கு சென்று விட்டு மாலை 4 மணி அளவில் குண்டளை எஸ்டேட்டில் உள்ள வீட்டிற்கு திரும்பினார். அப்ேபாது புதுக்கடி டிவிஷன் அருகே சென்றபோது டூவீலர் பழுதடைந்தது.அதன்பின் டூவீலரை தள்ளிக் கொண்டு சென்றவர், அப்பகுதியில் உள்ள கடை அருகே திடீரென மயங்கி விழுந்து இறந்தார். மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக தெரிய வந்தது. இதுசம்மந்தமாக தேவிகுளம் போலீசார்ர் விசாரைண செய்து வருகின்றனர்.