அவனியாபுரம். மார்ச் 22: மதுரையில், மனைவி தன் இரு குழந்தைகளுடன் பிரிந்து சென்ற வேதனையில், விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை, பெருங்குடி அருகே வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (32). விவசாயியான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் இவருக்கும் இவரது மனைவி வினோதினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இரு குழந்தைகளுடன் வினோதினி பெருங்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனஉளைச்சல் அடைந்த முருகன் கடந்த 18ம் தேதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். முருகனின் தற்கொலை குறித்து பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மனைவி பிரிந்து சென்றதால்
previous post