போடி, ஜூன் 14: போடி அருகே தேவாரம் தெற்கு தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் ரமேஷ். இவர் மனைவி மணிமாலா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வே றுபாடு காரணமாக கடந்த எட்டு ஆ ண்டுகளாக பிரிந்து தனித் தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மணிமாலா, ஜீவனாம்சம் கேட்டு போடி ஒருங்கிணைந்த உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விசாரனையும் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மணிமாலா போடி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகி விட்டு வெளியில் வந்தபோது, இவரது கணவர் ரமேஷ், பாண்டித்துரை என்பவரை காரில் ஏற்றி மோதவிட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளார். போலீசார் பாண்டித்துரையை கைது செய்து, மணிமாலாவை மீட்டுதேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய ரமேஷை தேடி வருகின்றனர்.