Thursday, May 9, 2024
Home » மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் வீசி 2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் வீசி 2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை

by kannappan

தோகைமலை: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா சிவாயம் தெற்கு ஊராட்சி ஆதனூரை சேர்ந்தவர் முருகேசன்(35). பொக்லைன் டிரைவர். இவரது மனைவி பழனியம்மாள் (எ) பிரியா(27). இவர்களுக்கு ருதுஷ்னாஸ்ரீ (4), கிருஷ்ணா(2) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனால் முருகேசன், மனைவி மீது விரக்தியில் இருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், இரண்டு குழந்தைகளையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு வெளியே சென்றுள்ளார். தோகைமலை அருகே மருதூர் என்ற இடத்தில் உள்ள 100 அடி ஆழ கிணற்றில் 2 குழந்தைகளையும் தூக்கி வீசியுள்ளார். பின்னர் அவரும் கிணற்றில் குதித்தார். அப்போது கையில் அடிபட்டதால் வலி தாங்க முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்து பார்த்து தோகைமலை போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி முருகேசனையும், 2 குழந்தைகளின் சடலங்களையும் மீட்டனர். முருகேசன் கைமுறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்….

You may also like

Leave a Comment

eighteen − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi