Tuesday, May 14, 2024
Home » ‘மனைவியின் ஆடையைக் கிழித்து விரட்டல்’ தட்டிக்கேட்ட பெண்கள் மீது நாய்களை ஏவி விட்டு கடிக்க வைத்தவர் கைது

‘மனைவியின் ஆடையைக் கிழித்து விரட்டல்’ தட்டிக்கேட்ட பெண்கள் மீது நாய்களை ஏவி விட்டு கடிக்க வைத்தவர் கைது

by kannappan

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை, கெம்ப்பண்ணன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி செந்தாமரைச் செல்வி (45). இவர் குடும்பத்துடன் ஆலாங்கொம்பு பகுதியில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் உதயகுமார். இவர் ஆந்திராவில் வேலை பார்த்து வருகிறார். 3 மாதத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு வந்துசெல்வார். சமீபத்தில் ஊருக்கு வந்திருந்த உதயகுமாருக்கும் அவரது 2வது மனைவி சந்திரமணிக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது சந்திரமணியை உதயகுமார் தாக்கியுள்ளார். இதில் அவரது ஆடை கிழிந்தது. அந்த கோலத்தில் அவரை வீட்டைவிட்டு விரட்டினார். அவரது அலறல் சத்தம் கேட்டு செந்தாமரைச்செல்வி அதிர்ச்சியடைந்து உதயகுமாரிடம் சென்று மனைவியை ஏன் அடித்து துன்புறுத்துகிறீர்கள்? என்று தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் தான் வளர்க்கும் 3 நாய்களை கடிக்க ஏவி விட்டார். நாய்கள் ஆவேசமாக சீறி பாய்ந்து செந்தாமரைச்செல்வியின் மகள் நிவேதா, லத்திகா மற்றும் உறவினர் ஒருவர் என 3 பேரையும் கடித்து குதறியது. இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.இதனையடுத்து 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து செந்தாமரைச்செல்வி சிறுமுகை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா வழக்குப்பதிவு செய்து நாய்களை ஏவிவிட்டு கடிக்க வைத்த உதயகுமாரை கைது செய்தார்….

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi