காரைக்குடி, டிச.28: காரைக்குடியில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு அடிமனைகளை உரிமையாக்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சாமி நடராஜன், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் ஆழகர்சாமி, நகர தலைவர் செந்தில்நாதன், நகர செயலாளர் வெங்கிட் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடி சூடாமணிபுரம், பாண்டிகோவில் வீதி, ரயில்வே குட்செட் பகுதி, சாமியார் தோட்டம் பின்புறம், வள்ளலார் தெரு, பதினெட்டாம்படி நகர், மருதுபாண்டியர் நகர், இந்திரா நகர், முத்துராமலிங்க தேவர் நகர், மூப்பனார் தெரு, உதயம் நகர், காளவாய் பொட்டல், கணேசபுரம் பகுதிகளில் பல ஆண்டுகளாக வீடுகட்டி குடியிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அடிமனைகளை உரியாக்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.