செங்கல்பட்டு: மனுநீதி நாள் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், குறுவட்டம், கரும்பாக்கம் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் எதிர்வரும் 27.6.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறவிருந்த மனுநீதி நாள் முகாம், நிர்வாக காரணங்களினால் எதிர்வரும் 28.6.2023 (புதன்கிழமை) அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. அரசு மாதந்தோறும் நடத்தும் மனுநீதிநாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
அதன்அடிப்படையில், ஜூன் 2023 மாதத்திற்கான மனுநீதிநாள் முகாம் திருப்போரூர் வட்டத்தில் கரும்பாக்கம் கிராமத்தில் எதிர்வரும் 28.6.2023 புதன்கிழமை, காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில், அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இதில், பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்கள் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.