புழல்: மனநலக் காப்பகத்தில் தங்கி யிருந்த இளம்பெண் மாயமானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சோழவரம் அருகே பண்டிகாவனூர் கிராமத்தில் தனியார் மனநலக் காப்பகம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சுரக்ஷா(39) என்ற மனநோயாளி கடந்த 12ம் தேதி காப்பகத்தில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறினார். பின்னர், அவர் காப்பகத்துக்கு திரும்பவில்லை. இப்புகாரின் பேரில், சோழவரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்….
மனநல காப்பகத்தில் பெண் மாயம்
previous post