ஆவடி, செப். 9: மத்திய மாவட்ட வழக்கறிஞர் சார்பில் ஆலோசனை கூட்டம் நாசர் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அவசர ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் புதுப்பித்தல் சேர்தல் பணி ஆகியவை ஆவடி ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வினோத் வரவேற்புரை ஆற்றினார். இதில், மாரிமுத்து, ராஜேந்திரன், நாகராஜ், துரை பழனி, பொன் புனிதவராஜன், செந்தில் குமார், முன்னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞர் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர், பல்வேறு கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இதில் சா.மு.நாசர் எம்எல்ஏ பேசும்போது, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட மற்றும் வழக்கறிஞர் அணியில் புதிய உறுப்பினர்கள் அதிகளவில் சேர்த்தல், புதுப்பித்தல் வேண்டும்.
மாநகர ஒன்றிய நகர பேரூர் பகுதிகளில் புதிய வழக்கறிஞர்கள் நியமிக்க வேண்டியதற்கான பணிகளை மேற்கொள்ளுதல், வேலூரில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவில் வழக்கறிஞர் அணி சார்பில் அதிக அளவில் பங்கேற்பது, 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இன்று முதல் அதற்கான பணிகள் மேற்கொள்வது, தேர்தலை முன்னிட்டு வாக்கு இயந்திரத்தை பரிசோதனைக்கும் போது கட்சி வழக்கறிஞர்கள் கண்காணிப்பது உள்பட பல பல்வேறு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ மாநில மாவட்ட நிர்வாகிகள் நடுகுத்தகை ரமேஷ், ஜெரால்டு, சீனிவாசன், காயத்திரி தர், ஜெயபாலன், நரேஷ் குமார், பொன் விமல், சன்பிரகாஷ், நாராயண பிரசாத், பொன் விஜயன், தேசிங்கு, திருமலை, கமலேஷ், பிரேம் ஆனந்த், ரவி, முனுசாமி, தங்கம்முரளி, பாஸ் முருகன் உள்பட கட்சி வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வடுக்க அஞ்சலியின் துணை அமைப்பாளர் பாஸ் முருகன் நன்றி கூறினார்.