ஈரோடு, ஜூலை 4: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து மேற்கொண்டனர். அதில், டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக மொடக்குறிச்சியில் நரேஷ்குமார்(32), கடம்பூரில் சத்யபாலன்(38), பங்களாபுதூரில் பவுனாள்(38), சத்தியமங்கலத்தில் சுப்பிரமணி(43), பாலையா(54), சென்னிமலையில் நாகராஜ்(30) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 62 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஆசனூரில் உள்ள காட்டேஜில் மது அருந்த அனுமதித்தாக ஜெயபாலன்(69) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க கடைகளில் நேற்று முன்தினம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், அளுக்குளி மளிகை கடைகளில் புகையிலை விற்றதாக ராஜ்(64), கணேசன்(68), சிக்கரம்பாளையத்தில் லிசாந்த்(21),நஞ்சை ஊத்துக்குளியில் விவேகானந்தன்(67) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் கடையில் இருந்த புகையிலை, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.