Sunday, May 12, 2024
Home » மதுரையில் மாணவியை ஆபாச படம் எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியவர் உள்பட 2 கைது

மதுரையில் மாணவியை ஆபாச படம் எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியவர் உள்பட 2 கைது

by Ranjith

 

மதுரை, ஜூலை 29: மதுரையில் மாணவியை ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் விடுவதாக மிரட்டி பாலியல் தொந்தரவு செய்தவர் உள்பட 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மதுரை சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்த் (48). இவர் பெரியார் நிலையம் பஸ் நிலைய பகுதியில் பிளவர்ஷாப் கடை நடத்தி வந்தார். இவர் 19 வயது கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து அதனை இணையதளத்தில் வெளியிடுவதாக அவரை மிரட்டி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து மாணவின் தந்தை அளித்த புகாரின் பேரில், மதுரை தெற்கு வாசல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து ஆனந்த்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுபோல், மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் (38) 7 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், தெற்குவாசல் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து முத்துக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

three × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi