தோகைமலை: கரூர் மாவட்டம் கடவூர் அருகே கடவூர் ஊராட்சி கிழக்கு அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பிச்சை (60). இவர் தனது பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதேபோல் சுக்காம்பட்டி பொன்னுச்சாமி மகன் கனகராஜ்(23). செம்பியநத்தம் ஊராட்சி மோளப்பட்டி சின்னத்தாய் (65). கடவூர் ஊராட்சி இடையப்பட்டி பொன்னுச்சாமி (42). இவர்கள் தங்களது வீட்டின் பின்புறம் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் அப்பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது பிச்சை, கனகராஜ், சின்னத்தாய், பொன்னுச்சாமி ஆகியோர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபானங்களை பறிமுதல் செய்து அனைவரையும் கைது செய்தனர்.
மதுபாட்டில் பதுக்கி விற்ற 4 பேர் கைது
previous post